ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

கவிதை 45 - கணினி

கணினியில் கணிதமோ,
உன் மூளைக்கு விரதமோ ....!

கணினியில் கவிதையோ,
ஏட்டும் எழுது கோலும் மறந்தாயோ...!

கணினியில் ஓவியமோ,
காகிதமும் தூரிகையும் தொலைத்தாயோ...!

கணினியில் திரைப்படமோ,
திரையரங்கும் நாடகமேடையும் அலுத்து போனதோ...!


கணினியில் விளையாட்டோ,
மைதானமும் தெப்பக்குளமும் வெறிச்சோடிக்கிடப்பதா...!

கணினியில் உறவுமுறையோ,
நட்பும் சொந்தமும் நேரில் அழைக்கவில்லையா...!

கணினியில் வேலையோ,
உடலுக்கும் உள்ளத்திற்க்கும் ஒய்வு கொடுத்தாயோ...!

கணினியில் இணையமோ,
மெய்நிகர் உலகில் தனிமை வாட்டுதோ ....?

--சிவா