ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

கட்டுரை 1- தமிழ் மொழி - தொண்மையான மொழி

சங்க கால தமிழ், பண்டைய தமிழ், செந்தமிழ் / தூயதமிழ், நவீன தமிழ் என்று மாறி வரும் தமிழ் மொழியை பற்றி முதலில் எனது கட்டுரையை இந்த கவிதை மழை வலைப்பூவில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

தமிழ் மொழியின் தொண்மையை பற்றி வெளிநாட்டு பேராசிரியிர்கள் தமிழில் தெள்ள தெளிவாக சொற்ப்பொழிவு நடத்தும் இந்த காலத்தில், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது சுலபம் என்று கருதுவதே மாபெரும் வெட்கக்கேடு. ஆங்கில மொழியின் தாக்கம் என்னவோ நம் தினசரி வாழ்க்கையில் சகஜமாகிவிட்டது. ஆனால் முடிந்த வரை தமிழ் வார்த்தைகளை தமிழ் தெரிந்த வரிடம் முழுமையாக தமிழில் கலந்துரையாட நாம் ஏன் தயங்க வேண்டும்.

எந்த மொழியை கற்றாலும் நாம் அதை அரை குறையாக தான் கற்றுக்கொண்டிருக்கின்றோம். தினசரி வாங்கும் பொருட்களில் தான் கலப்படம் என்றால் மொழியிலும் கலப்படம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனது பள்ளி பருவத்தில் தமிழ் ஒரு பாடமாக கூட இருந்ததில்லை - இரண்டாம் நிலை பாட மைய குழுவில் நமது தேச மொழி ஹிந்தி தான் எனக்கு இரண்டாம் மொழி. ஆங்கிலம் முதல் மொழி. ஆனால் தமிழை தாய் மொழியாக பெற்றது என் பாக்கியம். எனது அப்பா, அம்மா சொல்லிக்கொடுத்த தமிழ் உயிர்-மெய் எழுத்துக்கள் வைத்து இவள்ளவு தூரம் தமிழில் விசை பலகையில் கட்டுரை எழுதவது வரை தமிழ் மேல் கொண்டுள்ள என் ஆர்வம் குறையவில்லை. 

தமிழ் மொழியின் வரலாற்றை அலசி பார்த்தால் சங்க காலத்தில் தோன்றிய தொல்காப்பியம் தான் முதலில் கிடைத்த பொக்கிஷம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் தமிழ் மொழியின் படைப்புகள் ஓலை சுவடிகளாக சேகரிக்கப்பட்டு வரலாற்று சான்றாக விளங்குகிறது. சங்க கால தமிழை ஆராய்ச்சி செய்த அத்துணை தமிழ் வல்லுனர்களுக்கு என் இரண்டாவது வணக்கம். சங்க கால தமிழை படைத்த பழம் பெரும் புலவர்களுக்கு என் முதல் வணக்கம்.
பழம் பெருமை வாய்ந்த செம்மொழியாம் தமிழ் மொழி.

வாழ்க தமிழ்,
சிவசுப்பிரமணியன் ...