ஒரு நொடி காத்திருக்க வில்லை ....
சில நொடிகள் பார்த்த பெண்னுக்காக
ஒரு நாள் உன் விழிகள் ஏன் காத்திருக்கின்றது ***
நெடு நேரம் நிற்கும் முதியவருக்காக
அமர இடம் தர மனமில்லை ....
சில நொடிகள் நின்ற பெண்னுக்காக
உன் கால்கள் ஏன் வலிக்கின்றது ***
நெடுங்காலமாகியும் உன் குரலை நெடுந்தூரம்
உள்ள உன் பெற்றோர்கள் கேட்கவில்லை ....
சில நொடிகள் புன்னகைத்த பெண்னுக்காக
வாழ்நாள் முழுதும் பேச உன் நாவு ஏன் துடிக்கின்றது ***
நெடுஞ்சாலையில் அதிவேகமாக இரு சக்கர
வாகனத்தை செலுத்தும் பொழுது பதற்றமில்லை ....
சில நொடிகள் பேசலாம் என்ற பெண்னுக்காக
நடுநிசி வரையில் தூக்கமில்லாமல் உன் இதயம் ஏன் படபடக்கின்றது ***
நெடுந்துயரம் பஞ்சமாக வந்த போதிலும்
வஞ்சமில்லா உன் நெஞ்சம் கலங்கவில்லை
சில நொடிகள் மௌனகீதம் பாடும் பெண்னுக்காக
கஞ்சமில்லா உன் வாழ்க்கை ஏன் தஞ்சமடைகிறது ***
மறுபடியும் சில நொடிகளுடன் சந்திப்போம்,
சிவசுப்பிரமணியன் ***