வியாழன், 28 ஜூன், 2012

கவிதை 29 - காதல் என்பது ???

காதல் என்பது - காத்திருக்கும் மோதல் :)
காதல் என்பது - காலத்தின் தூண்டுதல் :)
காதல் என்பது - காயமடைந்த மனதிற்க்கு ஆறுதல் :)


நிலவின் ஒளியை பகிர்ந்து கொள்ள தோன்றும்
அன்பு தான் காதல் ...
உலகத்தை தன் காலடியில் சரண் அடைய செய்யும்
பண்பு தான் காதல் ...
கனவுகளும் ஆசைகளும் நிறைந்த அதிசயமான
ஊர்வலம் தான் காதல் ...
இரு கண்கள் சந்திக்கும் போது உள்ளத்தில்
உருவாகும் ஏக்கம் தான் காதல் ... 
இரு கைகளைக்கொண்டு தீபச்சுடரை காக்கும்
உணர்வு தான் காதல் ...
துன்பத்தை இன்பமாக்க உதவும் பொறுமையின்
சிகரம் தான் காதல் ...
சோகத்தை சந்தோஷமாக்க உதவும் புன்னகையின்
கோபுரம் தான் காதல் ...
என்றென்றும் காலத்தால் அழிக்க முடியாத
சரித்திரமாகவும் காவியமாகவும் தொடரட்டும் இந்த காதல் *****

திங்கள், 25 ஜூன், 2012

கவிதை 28 - நண்பர்கள்

தவறான பாதையில் வாழ்க்கை பயணம் தொடரும் போது,
நண்பர்கள் அதை சுட்டி காட்டி அறிவுரை சொல்வது அற்புதம் !

வெற்றி துடிப்போடு புகழின் உச்சிக்கு செல்லும் போது,
நண்பர்கள் ஓடிவந்து மனப்பூர்வமாக உற்சாகப்படுத்துவது ஆனந்தம் !

தோல்வி தவிப்போடு வாழ்வின் வீழ்ச்சிக்கு தடம் மாறும்போது,
நண்பர்கள் தடுமாறாமல் தோள் கொடுத்து சுமையை தாங்குவது அபூர்வம் !

தொடர் துயரங்களால் குழப்பமான சூழ்நிலை நிலவும் போது,
நண்பர்கள் தந்திரங்களை தடாலடியாக கோர்த்து கொடுப்பது அட்டகாசம் !

நிம்மதி கிடைக்காமல் அழுத்தமான மனநிலை உருவாகும் போது,
நண்பர்கள் தயங்காமல் அக்கறையோடு ஆறுதலளிப்பது அமர்க்களம் !

ஆலோசனைகளை ஆரவாரத்தோடு அலசுவது அரட்டை அரங்கம்,
மறைந்து கிடக்கும் பாச புதையலை அடையாளம் காட்டுவது நட்புச்சுரங்கம் !

ஆழ்கடலில் மூழ்கியிருப்பதோ சிப்பிக்குள் முத்து,
ஆழ்மனதில் சிக்கியிருப்பதோ நட்பு எனும் சொத்து !

பல்கலைக்கழகம் கற்று தருவதோ நல்ல பழக்கம்,
ரகசியங்களை ரசனையோடு பகிர்ந்து கொள்வதோ நட்பின் வழக்கம் !

கருத்துக்களை புதுமையோடு பட்டியல் போடுவது பட்டிமன்றம்,
வாழ்நாள் முழுதும் துணை நிற்ப்பது நட்புக்கான மன்றம் !

திருவிழா கூட்டம் என்றால் பார்க்கலாம் ஊர்வலம்,
நண்பர்க்கூட்டம் என்றால் அசரவைப்பது நட்பின் பலம் !!!!

ஞாயிறு, 24 ஜூன், 2012

கவிதை 27 - சாதனை படிகள்


அமைதியின் இருப்பிடத்தை தேடி செல்வோம்,
நாம் போகும் பாதையில் முட்கள் மலரச்சேய்வோம் !!!

வெற்றியின் சிகரத்தை நோக்கி போவோம்,
நாம் சந்திக்கும் துன்பங்களை இன்பங்களாக கருதுவோம் !!!

மகிழ்ச்சியின் எல்லையை எட்டி பிடிப்போம்,
நாம் எதிர்காலத்தின் முடிவுகளை சிந்திப்போம் !!!

நட்பின் ஆழத்தை என்றும் நிலை நாட்டுவோம்,
நாம் நமது இலட்சிய குறிக்கோள்களை தீர்மானிப்போம் !!!

நேர்மையின் வழியில் என்றும் செயல் படுவோம்,
நாம் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வோம் !!!

அறிவின் ஆற்றலை அச்சமின்றி துணிவுடன் வளர்ப்போம்,
நாம் மண்ணுக்கு முதல் மரியாதை செலுத்துவோம் !!!

பாசத்தின் பூக்களை பண்புடனும் பணிவுடன் சேகரிப்போம்,
நாம் ஒற்றுமையுடன் என்றும் கூடி வாழ்வோம் !!!

அன்பின் மழை பொழிய பிரார்த்தனை செய்வோம்,
நாம் நம் தாய் நாட்டுக்கு தலை வணங்குவோம் !!!

மனத்தூய்மை கொண்டு பிரபஞ்சத்தை சுத்தம் செய்வோம்,
நாம் நமக்கு வஞ்சனை செய்யும் நஞ்சு நிறைந்த,
நெஞ்சங்களை அமிர்தத்தை கொடுத்து நல் உள்ளங்களாக,
மாற்றி புது வரலாறு படைப்போம் !!!

-சிவசுப்பிரமணியன்

சனி, 23 ஜூன், 2012

கவிதை 26 - இயற்க்கை காதல்

ஆழமான கடலில் நான் கண்டெடுத்த முத்து நீ,
அழகான தோட்டத்தில் நான் தேடிவந்த மலர் நீ,
நீளவான நதியில் நான் ரசித்த நிலவும் நீ,

அற்புதமான கற்களில் நான் செதுக்கி வைத்த சிலை நீ,
சுத்தமான முட்களில் நான் பதுக்கி வைத்த மொட்டு நீ,
உயரமான மாமரங்களில் நான் எட்டி பிடித்த மாங்கனியும் நீ,

இயற்கையின் மொழிதனை புரிய வைத்த நீ யாரோ?
புரியாத புதிராக ஏங்கி தவிக்கும் நான் யாரோ?

நான் எங்கு தேடியும் உன்னை காணவில்லையே,
நீ என்னுள் இருப்பதை இன்னும் உணரவில்லையே,
நான் உன்னை பார்த்தாலே கடந்தகாலம் ஞாபகமில்லையே,

நீ என்னுடன் பேசினாலே வருங்காலம் தெரிவதில்லையே,
நான் உனக்காக சேர்த்து வைத்தேன் முத்துமாலையே,
நீ ஆனால் விரும்பியதோ அந்த வானவில்லையே,

நான் உன்னை வர்ணிக்க வார்த்தைகள் வரவில்லையே,
நீ என்னை விட்டு போக மனம் இடம் தரவில்லையே,
இல்லாத ஒன்றினை கற்பனை செய்ய சொன்னது நீ தானோ?
ஏதோ இருக்கும் என நம்பி ஏமாற்றம் அடைந்தது நான் தானோ?

சனி, 9 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (கடைசி பாகம் 9)


உலகின் ஏதோ மூலையில் நடைபெறும் கால்பந்து,கிரிகெட் போட்டிகளை
கண்டு களிக்க தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு;
வெகுமதி பெறுவதற்கு அரசு ஊழியர்கள் நடத்தும் வேலை
நிறுத்தத்தால் எங்கும் கடை அடைப்பு;

நவீன தொழில் நுட்பத்திற்கு கிடைத்த ஞாபக சின்னம் தான்
சின்னஞ்சிறு அலைபேசி கண்டுபிடிப்பு;
சாலை விதிமுறைகளை மற்றும் சட்ட ஒழுங்கை கடைபிடிக்க
மக்களுக்கு ஏன் இவ்வளவு களைப்பு;

ஆன்மீக சிந்தனையில் பக்தி மார்க்கம் தேடி நடக்கும் சந்நியாசிகள்
சொந்த-பந்த,சுக-போகங்களை அர்பணிப்பு;
தவழும் குழந்தைகளுக்கு மற்றும் தள்ளாடும் முதியோர்களுக்கு
தர வேண்டும் அலட்சியமில்லாத கண்காணிப்பு;
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் எனப்படுவது
தரம் வாய்ந்த நாணயமுள்ள பொருட்களின் தயாரிப்பு;

(1௦௦ வது வரி) - அட்டவணை போட்டு வைத்தாலும் நிர்ணயிக்கமுடியாத
சுற்றுப்புற சூழல் நிகழ்வுகளை, ஒவ்வொரு வினாடியில் தோன்றும்
முடிவுகள் இல்லாத மாபெரும் மாற்றங்களை மற்றும் மக்கள்
எதிர்பார்க்காமல் ஏற்ப்படும் எல்லைகள் இல்லாத திடுக்கிடும்
சம்பவங்களை தண்டோரா போட்டு சொல்லும்
தொடர் வண்டி தான் இந்த நாட்டு நடப்பு !!!!!!!!!!!!!!!

மெகா கவிதை நாட்டு நடப்பு - முற்றும் :)

மீண்டும் என்னோட ஐம்பதாவது கவிதை மாபெரும்
நட்சத்திர தொடர் கவிதையாக உலா வரும்,
அது வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது,
சிவசுப்பிரமணியன் **

வெள்ளி, 8 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 8)


உலகின் அமைதியை எப்பொழுதும் சீர்குலைக்கும் வகையில்
ஆங்காங்கே தொடர் குண்டு வெடிப்பு;
தஞ்சம் என்று நம்பி வரும் அகதிகளுக்கு அடைக்கலத்துடன்
கொடுக்க கூடியது போதுமான சுதாரிப்பு;

குடிப்பழக்கத்திற்கும் புகை பிடிப்பதற்கும் தடை விதிக்க சட்டம்
கொண்டு வரக்கோரி மனுக்கள் அனுப்பினால் நிராகரிப்பு;
பிள்ளைகளின் மனதை நோகடிக்காமல் நாட்டின் முதுகெலும்பாக
மாற்றும் வகையில் ஆசிரியர்கள் கண்டிப்பு;

உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தி விட்டால்
யாவர்க்கும் தங்கபதக்கம் வாங்கிய நினைப்பு;
நீர்மட்டம் அதிகரிப்பதோடு தண்ணீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் விடை - மாபெறும் அணைகளின்திறப்பு;

காதல் வலையில் மாட்டிக்கொண்டு காதலர்கள் ஓடி விட்டால்
அவர்களை பெற்றோருக்கு இரத்தக்கொதிப்பு;
அங்கீகாரம் மற்றும் போதுமான இட வசதிகள் பெறாத கல்லூரிகள்
முன்பு மாணவர்கள் கொந்தளிப்பு;

தொடரும் ...

வியாழன், 7 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 7)

உற்சாகத்துடன் பார்க்க தோன்றும் கிரிக்கெட் வீரர்களின்
அதிரடி ரன் குவிப்பு;
சிரத்தையுடன் விடாமுயற்சி செய்தால் எந்தத்துறையிலும்
உயர் பதவி நீடிப்பு;
நாள் தோறும் போட்டி போட்டுக்கொண்டு சூடான செய்திகளை
தரும் பல பத்திரிக்கை பதிப்பு;
தோல்வியை கண்டு அஞ்சாமல் வெற்றியை உருவாக்கும்
வழிகளில் சிந்தனையை திருப்பு;
பறவை காய்ச்சல் போன்ற நோய்கள் வராமலிருக்க
கிருமி நாசனி மருந்துகள் தெளிப்பு;
வேகமாக வளர்ந்து வரும் கணினி யுகத்தில் சாதனை
படைக்க விரும்புவது இளைஞனின் எதிர்பார்ப்பு;
அஸ்திவாரம் ஆணித்தரமாக கட்டினாலும் நிலநடுக்கம்
வந்தால் காணாமல் போய் விடும் குடியிருப்பு;
காதலன் ஏமாற்றி விட்டால் நடிகைகள் தற்கொலை செய்து
கொள்வது நிஜ வாழ்க்கையோடு ஏற்பட்ட சலிப்பு;
சிந்திக்க கூடிய தத்துவங்களை சிரிப்புடன் கலந்து தருவது
நல்ல சினிமா ஏற்படுத்தும் பிரமிப்பு;
ஏய்ட்ஸ் போன்ற குணமடையாத வியாதிகள் வராமலிருக்க
மக்களுக்கு தேவைப்படும் உணர்வு விழிப்பு;
சாப்பிடும் உணவிலிருந்து கட்டின வீடு வரைக்கும் பயனுள்ள
பொருட்களுக்கு வேண்டும் பராமரிப்பு;
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியோடு தென் பட்டால் அதற்க்கு காரணம்
பெட்ரோல் - டீஸல் விலை குறைப்பு;

தொடரும் ...

திங்கள், 4 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 6)


குடும்பத்தில் சந்தேகத்தால் சிறு சண்டை வந்தாலும்
அக்கம் - பக்கம் முனுமுனுப்பு;
மழை நீர் மட்டுமல்ல எதிர்கால திட்டங்களுக்கும் உடனடி
தேவை தான் சேமிப்பு;
சுனாமி மட்டுமல்ல மற்றவர்கள் மனதை புண்படுத்துவதும்
தான் மிகப்பெரிய பாதிப்பு;
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு கூட கராத்தே
போன்ற வித்தைகள் தருவது தற்காப்பு;
நேரத்தை வீணாய்ச் செலவழிக்க மனிதன் கண்டு பிடித்த
யுக்தி தான் ஒத்திவைப்பு;
கறுப்பு பணம் சேகரிக்கும் தொழில் அதிபர்களை விட்டு
வைக்காது சட்டத்தின் வரி விதிப்பு;
மேடைகளில் துணிவோடு பேச வேண்டும் என்றால்
தவிர்க்க கூடியது படபடப்பு;
ஊனமுற்றோர் என்றால் ஒதுக்கி வைக்காமல் சமூகத்தில்
தர வேண்டும் ஊக்குவிப்பு;
இயற்க்கை சீற்றங்களை மற்றும் பெயர் தெரியாத வியாதிகளை
உயிர் பிரிந்த சடலங்கள் புதைப்பு;
தேசிய கீதம் பாடும் பொது ஒவ்வொரு குடிமகனுக்கும்
சல்யூட் அடிக்கச்செய்யும் சிலிர்ப்பு;
பாலைவனத்தில் நீர் வீழ்ச்சி கண்டால் உலகம் மறக்க
செய்யும் இயற்க்கை அரவணைப்பு;
அளவில்லாத ஆனந்தம் கிடைக்க மலைக்குன்றின்
உச்சிக்கு சென்று எதிரொலி எழுப்பு;


தொடரும் ...

வெள்ளி, 1 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 5)

 மலர்களாகவும் செல்வங்களாகவும் திகழும் மழலைகள்
செய்யும் ஆர்பாட்டம் தித்திப்பு;
காதலுக்கு மரியாதை செலுத்தி பிரியமுடன் வாழ்வதே
நல்ல ஜோடி அமைப்பு;
புகழ் ஏணியின் உச்சத்துக்கு போனாலும் மறக்க கூடாது
கடந்த கால வாழ்க்கை குறிப்பு;
கண்டுபிடிக்கப்பட்ட பல புது கருவிகள் மூலம் வேகமான
உலகில் அவசர செய்திகள் அறிவிப்பு;
வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகள்
யாவும் யூகிக்க முடியாத கணிப்பு;
சஞ்சலம் ஏற்பட்டாலும் கலங்காமல் கண்ணீரை துடைப்பது
பெற்றத்தாயின் கவனிப்பு;
ஆசைகளும் கனவுகளும் நிறைவேறி விட்டால் யாவருக்கும்
உலகின் அதிசயங்களை பார்க்கும் திகைப்பு;
கோபத்தை தூண்டுவதும் மற்றவர்களை இழிவு படுத்தி
பேசுவதற்கும் முதல் காரணம் இறுமாப்பு;
கணவன் மனைவி உறவு பிரிவில்லாமல் இருப்பதற்கு
தேவை வலுவான பிணைப்பு;
உறவுகளின் பந்தம் நேசத்தோடு உரு துணையாக இருக்க
உதவுவது பாசத்தின் இணைப்பு;
பக்தி பரவசத்துடன் இறைவனை வணங்கச்செய்வது
கோவில் மணி அழைப்பு;
விடுமுறை கொண்டாட்டம் என்றால் குடும்பமே
உல்லாச பயணத்தில் களிப்பு;

தொடரும்...