சனி, 28 ஏப்ரல், 2012

கவிதை 20 - கோடீஸ்வரன்

ஊசலாடும் மனதையும் சஞ்சலமூட்டும் சலனங்களையும்
கண்டு அஞ்சாமல் முடிவில் மாற்றமில்லாமல் உறுதியோடு
இருந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

அதிருஷ்டம் இருந்தால் பணம் வரும் என்று நினைக்காமல்
சுய உழைப்பில் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும்
ஏற்றுக்கொண்டால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

தான் செய்த தவறுக்கு பிறர் மீது பழி சுமத்துவதை விட்டு விட்டு
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் அதை 
ஒரு பாடமாக எடுத்துக்கொண்டால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

வெற்றி களிப்பில் தலைகனம் ஏறிவிடாமல் உலகில் கற்றுக்கொள்ள
கடலளவு விஷயங்கள் இருப்பதை உணர்ந்து வாழ்க்கை
பயணத்தை தொடர்ந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

உச்சியை தொட்டு விட்டோம் என்று எண்ணாமல் வளர்ச்சிக்கு வழி
ஒரு எல்லையில்லா பாதை என்பதை புரிந்து கொண்டு
இலக்குக்கு குறி வைத்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

என்ன சோதனை வந்தாலும் அதை அமைதியாகவும் பொறுமையாகவும்
சமாளித்து அபாயங்களை எதிர் கொள்ளும்
திறன் இருந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை கைதியாக மாறி விடாமல்
தெளிவான மனமும் குணமும் சேர்ந்திருக்க வலுவான
உடல் நலத்தை தக்க வைத்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் கொடுத்த வாக்கை
காப்பாற்றிக்கொண்டு பிறருக்கு நல்ல வழிகாட்டியாக
இருந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

அடுத்தவர்களுக்கு கேடு நினைக்காமல் நேர்மையை
கடமை என்று பாவித்து உண்மையை உயிர் மூச்சாக
கடைபிடித்து வந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

சமுதாயத்தின் பொது நலனில் அக்கறை செலுத்தவும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடு படவும் ஊக்கமளிக்கும் அத்தனை
வேலைகளையும் விரும்பி செய்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

விடாமுயற்சி , தொடர் பயிற்சி , இலட்சிய வெறி ,
தன்னம்பிக்கை என்று அடுக்கி கொண்டே போகும் அனைத்து
தீர்க்கமான தீர்மானமான ஆழ்ந்த சிந்தனைகள்
சூழ்ந்து கொண்டு எல்லாம் நன்மைக்கே எனும் நல்ல
கொள்கைகளை வாழ்நாள் முழுதும் நடைமுறையில்
பயன் படுத்தும் யுக்தி தெரிந்தால் உனக்குள் இருக்கும் சக்தி
ஞாபகபடுத்தும் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

வெல்வோம்,
சிவசுப்பிரமணியன் !!

கவிதை 19 - காலச்சுவடுகள்

மலரும் நினைவுகள் , ஆசை கனவுகள் ;
ஒலிக்கும் ராகங்கள் , நகைக்கும் மேகங்கள் ;
தாலாட்டும் பாடல்கள் , உதவும் கரங்கள் ;
நேசிக்கும் முட்கள் , புன்னகை தரும் பூக்கள் ;
சலங்கை சத்தங்கள் , சங்கு முழங்கும் ஓசைகள் ;
துள்ளும் தாளங்கள் , மயக்கும் நாதஸ்வரங்கள் ;
மேடை கச்சேரிகள் , முடிசூடா மகுடங்கள் ;
இயற்க்கை சோலைகள் , பூங்குயில் பாடல்கள் ;
தேன்சிந்தும் முத்துக்கள் , புல்லாங்குழல் மெட்டுகள் ;
இன்னிசை கீதங்கள் , பளிச்சிடும் விளக்குகள் ;
தத்ரூபமான ஓவியங்கள் , செதுக்கிய கலைச்சிற்பங்கள் ;
அமைதி பூங்காக்கள் , கவர்ந்திழுக்கும் புள்ளிமான்கள் ;
மாயக்கண்ணாடிகள் , உலக அதிசயங்கள் ;
நடனமாடும் மயில்கள் , தொலைதூர நட்சத்திரங்கள் ;
வானளாவிய கோபுரங்கள் , ஆர்பரிக்கும் கல்தூண்கள்;
செந்தமிழ் மொழிகள் , வரலாற்று பொக்கிஷங்கள் ;
அருமை அருங்காட்சியங்கள் , மறந்த அரண்மனைகள் ;
தகவல் நூலகங்கள் , கட்டுக்கடங்காத கோட்டைகள் ;
சிங்கார சித்திரங்கள் , சிலிர்ப்பூட்டும் செங்கதிர்கள் ;

இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இந்த காலச்சுவடுகளை ,
இவை அனைத்தும் என் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த காலச்சுவடுகள் !
இந்த காலச்சுவடுகளால் நம்மை நாம் பலமுறை மறந்து விடுகின்றோம் !
காலத்தின் கட்டளைக்கு மனிதன் தான் அடிமை ஆகிவிட்டானோ ,
இல்லை காலத்தின் போக்கில் மனிதன் ஒன்றி பொய் விட்டானோ ..!!!!

காலம் பதில் சொல்லட்டும்,
சிவசுப்பிரமணியன் ***

சனி, 21 ஏப்ரல், 2012

கவிதை 18 - நிழலும் நிஜமும்

கடைபிடித்து போற்றுங்கள் உங்கள் வெற்றியை,
நன்றி சொல்லுங்கள் அந்த வெற்றிக்கு காரணமான தோல்வியிடம் ***

நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் சந்தோஷத்தை,
பாராட்டு தெரிவிக்கவும் அந்த சந்தோஷத்திற்கு காரணமான எதிரிகளிடம் ***

நிலை நிறுத்துங்கள் உங்கள் தைரியத்தை,
சவால் விடுங்கள் அந்த தைரியத்தை கொடுத்த பயத்திடம் ***

தக்க வைத்து கொள்ளுங்கள் கிடைத்த பதவியை,
வாழ்த்து அனுப்புங்கள் அந்த பதவிக்கு ஆசைப்பட்ட போட்டியாளர்களிடம்***

செலுத்துங்கள் குடும்பத்திடம் உங்கள் பாசத்தை,
அசை போடுங்கள் அந்த பாசத்திற்கு தடையான கர்வத்திடம் ***

உடும்பு பிடி போல் பிடித்து கொள்ளுங்கள் விடாமுயற்சியை,
விடை பெறுங்கள் முயற்சியை தூண்டி விடும் வீழ்ச்சியிடம் ***

புன்னகை சிந்தி பறிமாறி கொள்ளுங்கள் இன்பத்தை,
எதிர்த்திடுங்கள் சோகங்களை பொட்டலமாக கொண்ட துன்பத்திடம் ***

நல்ல முறையில் பயன் படுத்துங்கள் நமக்கு கிடைத்த சுதந்திரத்தை,
தலை வணங்குங்கள் அன்று போராட்டம் நடத்திய மகான்களிடம் ***

பத்திரப்படுத்துங்கள் பெற்றோர்கள் சூட்டும் புகழாரத்தை,
மன்றியிடுங்கள் புகழை தேடி தந்த பெற்றோர்களின் கடின உழைப்பிடம் ***

பின்பற்றுங்கள் சரியான வழியில் நாடி வரும் பொறுப்புள்ள குணங்களை,
விலகியிருங்கள் தவறுகளை தொகுப்பாக கொண்ட அலட்சியத்திடம் ***

நம்புங்கள் எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் நல்லவனை,
உஷாரயிருங்கள் எல்லாம் தீமைக்கே என்று கேடு செய்யும் கெட்டவனிடம்***

மறந்து விடாதீர்கள் வாழ்க்கை பாடத்தை கற்பித்த அனுபவங்களை,
மதிப்பு கொடுங்கள் அனுபவங்களை ஏற்படுத்திய வாய்ப்புகளிடம்***

தொலைத்து விடாதீர்கள் உங்கள் சாதனைக்கு கிடைத்த தங்கப்பதக்கத்தை,
ஆச்சர்யப்படுங்கள் அந்த பரிசுக்கு விதைபோட்ட ஆசைகளிடம்***

பாலம் கட்டுவது போல் விரிவு படுத்துங்கள் நட்பு வட்டாரத்தை,
ஜாக்கிரதையாக இருங்கள் நட்புக்கு
பிரிவுண்டாக்கும் சுவர் போல் உள்ள தடைகளிடம்***

ஆனந்தமாய் கொண்டாடுங்கள் உங்கள் நேர்மைக்கு கிடைத்த நாணயத்தை,
முழுக்கு போடுங்கள் அந்த நாணயத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்கும் சோம்பலிடம்***

தட்டி எழுப்புங்கள் உங்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மாவீரனை,
அஞ்சாமால் போராடுங்கள் உங்களை அடக்கி வைத்த கோழையிடம்***

வளர்த்துக்கொள்ளுங்கள் கற்பனையை மேம்படுத்தும் கனவுகளை,
துவண்டு விடாதீர்கள் கனவுகளை
நினைவக்காமல் சிதைக்கும் ஏமாற்றத்திடம்***

தோண்டி எடுங்கள் உள்ளுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை,
நழுவ விடாதீர்கள் திறமைக்கு தோள்
கொடுக்கும் பொன்னான நிமிடங்களிடம்***

அடையாளம் காணுங்கள் உங்களை சூழ்ந்துள்ள
நிஜங்கள் மற்றும் நிழல்களை
பிறகு தேர்ந்தெடுங்கள் உங்களுக்கு வெற்றி வழி காட்டும் முறையான- சரியான பாதையிடம் *****

இப்படிக்கு,
சிவசுப்பிரமணியன் !!!!

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

கவிதை 17 - நினைத்துப்பார்

பிடிக்காத உணவை சாப்பிடாமல் சலிப்புடன் ஒதுக்கி வைத்தால்,
பசி-பட்டினியோடு கிடக்கும் அநாதை ஏழைகளை நினைத்துப்பார்,

சின்ன-சின்ன கவலையோ,பிரச்சினையோ,கஷ்டமோ வந்தால்,
எதிர்நீச்சல் போட்டு போராடும் தன்னம்பிக்கையுள்ள
ஊனமுற்றோரை நினைத்துப்பார்,

வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகளை மட்டும் சந்தித்தால்,
விடாமுயற்சியுடன் வெற்றிக்கு பாடுபட்டு சிகரம்
தொட்ட பிரபலங்களை நினைத்துப்பார்,

பிறரை குறை சொல்லுவதும், மற்றவர்களை கேலி செய்யும் போதும்,
அறிந்தும் அறியாமலும் செய்த அளவற்ற
தன் தவறுகளை நினைத்துப்பார்,

கையளவு கற்றுக்கொண்டு அதிகாரம் செலுத்தும் கர்வம் வந்தால்,
கடலளவு உலகம் தெரியாத கிணற்றுதவளையை நினைத்துப்பார்,

குற்றத்தை ஒப்புகொள்ளாமல் அடுத்தவர் மீது மழி சுமத்தும் போது,
பிழையான எண்ணத்தால் வரும் கொடூர விளைவுகளை நினைத்துப்பார்,

அடாவடியாக ஊர் சுற்றிக்கொண்டு வீண் செலவு செய்யும் போது,
இரவு பகல் பாராமல் பாடுபடும் பெற்றோர்களை நினைத்துப்பார்,

பணம்,பதவி,பட்டம்,புகழ் என்று அனைத்தும் சூழ்ந்துகொண்டால்,
உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத்தந்த உழைப்பு எனும்
ஏணிப்படிகளை நினைத்துப்பார்,

மாளிகை போல் வீடு இருந்தும் பேராசை அடங்கவில்லை என்றால்,
குப்பைத்தொட்டியில் பிறந்து வளர்ந்த பிஞ்சுகளை நினைத்துப்பார்,

சோகம்-சோதனை-கஷ்டம்-நஷ்டம் என்று வந்தால்,
உன் வாழ்க்கை உன் கையில் என்று நினைத்துப்பார்,

துன்பங்கள் துரத்தினால் ஆலயங்கள் சென்று கடவுளை தேடாமல்,
இன்பங்களை தந்தருளும் உனுக்குள் இருக்கும்,
இறைவனை மட்டும் நினைத்துப்பார் ******

அன்புடன்,
*சிவசுப்பிரமணியன்*

கவிதை 16 - இந்தியன்

காதல் வசப்பட்டு கற்பனை கவிதை
எழுதுபவன் நான் அல்ல,
இயற்கையை ரசித்து விட்டு சிந்தனை சித்திரம்
வரைபவன் நான் அல்ல,
அமைதியான இடம் தேடி சின்னஞ்சிறு சிலை
செதுக்குபவன் நான் அல்ல,
மங்கையின் அழகை கண்டு மாணிக்க மாளிகை
கட்டுபவன் நான் அல்ல,
கடற்க்கரை காற்று வாங்கி பாசமலர் பாட்டு
பாடுபவன் நான் அல்ல,
முரட்டு மனிதன் போல் கோபப்பட்டு நடராஜர் நாட்டியம்
ஆடுபவன் நான் அல்ல,
மண்வாசனைக்கு அடிமை என்றாலும் பூஞ்சோலை பூக்கள்
நுகர்பவன் நான் அல்ல,
இசையில் மயங்கி விழுந்தாலும் கல்யாண கெட்டிமேளம்
கொட்டுபவன் நான் அல்ல,
முகம் பார்க்க உதவினாலும் கண்ணாடி கட்டிடத்தில்
வசிப்பவன் நான் அல்ல,
கடவுள் நம்பிக்கை இருந்தாலும் வாஸ்து படி வாசல்
பார்ப்பவன் நான் அல்ல,
ஆதங்கப்படும் ஆசாமி போல் கதிகலங்கும் கவலைகளுக்கு
வருத்தபடுபவன் நான் அல்ல,
ஆஸ்திகள் பல கொட்டி கிடந்தாலும் பேராசை பேர்வழியாக
மாறுபவன் நான் அல்ல,
ஆசைகளை மனதுக்குள் பூட்டி அதற்க்கு மகத்தான மகுடம்
சூட்டுபவன் நான் அல்ல,
காற்கால மழையில் நனைந்து காகித கப்பல்
விடுபவன் நான் அல்ல,
விலைமதிக்க முடியாத முத்து கிடைக்க கட்டுகடங்காத கடலில்
மூழ்குபவன் நான் அல்ல,
அரசியல்வாதி போல் தேர்தல் வெற்றிக்காக வாக்குறுதிகள்
கொடுப்பவன் நான் அல்ல,
காரியம் கை கூட வேண்டி கபட நாடகம் ஆடி கள்ளக்கன்னீர்
விடுபவன் நான் அல்ல,
மேடைகளில் மாமேதை போல் சொதப்பல் சொற்பொழிவு
நிகழ்த்துபவன் நான் அல்ல,
ஜாதி-கலவரம்-தீவிரவாதம் என்ற பெயரில் தேசத்துரோகம்
செய்பவன் நான் அல்ல,
"ஜெய்-ஹிந்த்" என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு,
தன உயிரை பற்றி கவலைப்படாமல் பல கோடி உயிர்களுக்கு,
போராடும் சமூக சேவகன் மட்டுமல்லாமல் எல்லையிலிருந்து
கொண்டே எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றும் தியாக
உள்ளம் கொண்ட இராணுவ வீரன் தான் நான் *****

இவை அனைத்திற்கும் மேலாக தேசிய கோடியை ஏற்றி
வைத்து மரியாதை செலுத்தும் நான் ஒரு சராசரி இந்திய குடிமகன் *****

ஜெய் ஹிந்த்,
சிவசுப்பிரமணியன் ****

சனி, 7 ஏப்ரல், 2012

கவிதை 15 - இயற்க்கை உரையாடல்

மாமரத்தில் அசைந்தாடும் மாங்கனியே,
நாவில் தாண்டவமாடும் தமிழிசையே,
என் மனதிற்கு நிம்மதி தாருங்கள் **

வெள்ளை மழையாய் பொழியும் பனித்துளியே,
வளைந்து நெளிந்து வரும் வற்றாத நதியே,
என் மௌனத்திற்கு அர்த்தம் கூறுங்கள் **

சேவலை கொக்கரக்கோ என்று கூவச்செய்யும் சூரிய ஒளியே,
கார்த்திகை மாதத்தை ஞாபகப்படுத்தும் தீபச்சுடரே,
என் வாழ்வின் வெளிச்சமாக திகழுங்கள் **

அசைக்க முடியாத வல்லமை படைத்த அசுர மலையே,
திமிங்கலங்களை சுமக்கும் பரந்த உள்ளம் கொண்ட கடல் அலையே,
என் இதயத்திற்கு சுமை தாங்கும் பலம் கொடுங்கள் **

வேங்கையின் வீரத்தோடு வேட்டையாடும் புலிக்குட்டியே,
காட்டின் அரசனாகபோகும் சூரக்கோட்டை சிங்கக்குட்டியே,
என் வேகத்திற்கு ஒரு வழி காட்டுங்கள் **

அழகு பதுமை போல் காட்சியளிக்கும் வண்ண ரோஜாவே,
கல்வித்தாய் சரஸ்வதி வீற்றிருக்க உதவும் செந்தாமரையே,
என் நேர்மையை நிலை நிறுத்துங்கள் **

இன்னிசை ராகத்தோடு பாட்டு பாடிடும் பூங்குயிலே,
கச்சேரி தாளத்தோடு நடனம் ஆடிடும் பொன்மயிலே,
என் உடலுக்கு உற்சாகம் ஊட்டுங்கள் **

வறண்ட பூமியின் தாகத்தை தீர்க்கும் மழைத்துளியே,
மகாபாரத போரில் முழங்கிய சங்கு ஒலியே,
என் நம்பிக்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் **

அம்புலி மாமா என்றழைக்க படும் வெள்ளிநிற வெண்ணிலவே,
நிலவுக்கு துணையாக வானில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களே,
என் புத்திக்கு கூர்மை தீட்டுங்கள் **

புல்வேலிகளை கடந்து ஓசையில்லாமல் வரும் தென்றல் காற்றே,
மலைச்சரிவுகளை கடந்து ஓசையோடு விழும் நீர் வீழ்ச்சியே,
என் புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள் **

ஒட்டகங்களின் வாசஸ்தலமான அடர்ந்த பாலைவனமே,
பறவைகளின் உல்லாச பயணத்திற்கு வழி விடும் நீல மேகமே,
என் கோரிக்கைகளை பொறுமையுடன் கேளுங்கள் **

பார்த்தவுடன் ரசிக்க தோன்றும் பசுமை நிறைந்த பூஞ்சோலையே,
கனவுலகத்திற்கு அழைத்துச்செல்லும் எழில் கொஞ்சும் மாஞ்சோலையே,
என் சோகத்திற்கு முற்றுபுள்ளி வையுங்கள் **

காதலுக்கு தூது போகும் தூய்மையான வெள்ளைப் புறாவே,
கல்யாணத்திற்கு ஜோதிடம் பார்க்கும் பச்சைக்கிளியே,
என் எதிர்கால இலட்சியத்தை நிறைவேற்றுங்கள் **

ஆலயங்களில் பாவங்களை போக்கும் புனித தெப்பக் குளமே,
நெடு-நெடு வென வளர்ந்து நிற்கும் தென்னை மரமே,
என் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுங்கள் **

விவேகமாக துள்ளி ஓடும் புள்ளி மான் குட்டியே,
வண்ணங்கள் தீட்டிய மேனியுடன் தேன் அருந்தும் பட்டாம்பூச்சியே,
என் நிம்மதிக்கு ஓர் இடம் தேடுங்கள் **

எழில் கொஞ்சும் நெஞ்சம் கொண்ட அழகு அன்னமே,
வட்டமிட்டு சிறகடிக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியே,
என் சங்கீதத்திற்கு இசை மீட்டுங்கள் **

கர்ஜிக்கும் இடி முழக்கத்தோடு பளிச்சிடும் மின்னலே,
அதிசயங்கள் பல நிறைந்த அற்புத தீவுகளே,
என் ராகத்திற்கு தாளம் போடுங்கள் **

பொன் விளையுற பூமியை கொடுத்த பூமா தேவியே,
பாதுகாப்பும் அரவணைப்பும் தந்தருளும் இயற்க்கை அன்னையே,
என் பிரார்த்தனைக்கு சக்தியை திரட்டுங்கள் ****

**** இயற்க்கை ரசனையுடன்,
**** சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

கவிதை 14 - கடற்க்கரை காதல்

தூண்டில் போட்டு சிக்காத மீன் 'உண்டு',
தவழ்ந்து செல்லும் கரை ஓரம் ஒரு 'நண்டு',
சூடான சுண்டலுடன் விற்பனை ஆகும் 'வெள்ளைப்பூண்டு',
மெய் சிலிர்க்கும் காற்றோடு காதலர்கள் 'இரண்டு',
வெகு நேரம் காதலி மௌனமாக இருப்பதை 'கண்டு',
காதல் பரிசாக காதலன் கொடுத்தான் 'பூச்செண்டு',
சோகத்தை மறைத்து புன்னகை பூத்தாள் அதை 'ஏற்றுக்கொண்டு',
அவர்களை சுற்றி ரீங்காரம் அடித்தது பொன் 'வண்டு',
அருகே வானில் பட்டம் விட்டு லூட்டியடிக்கும் குட்டி 'வாண்டு',
அடிக்கடி அம்மாவிடமிருந்து வாங்கின திட்டு 'மண்டு',
ஜோடி புறாக்கள் அநேகம் நடத்தியது காதல் 'தொண்டு',
காதல் அபாயம் என எச்சரித்தது சிறை பிடிக்கும் 'கூண்டு',
காதல் அதிசயம் என பதிலடி கொடுத்தனர் காதலை துப்பறியும் 
காதலன்களான ஜேம்ஸ் 'பாண்டு',
புனிதமான காதலை துளி அளவு கூட அசைக்க முடியாது
ஓர் 'அணுகுண்டு',
கடற்க்கரை ஓரம் சங்கமம் ஆகும் காதலர்கள் மறக்கவில்லை 
காதலர்தினத்தை, ஆனால் மறந்து விட்டார்கள் அது எந்த 'ஆண்டு' ....!!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !