ஞாயிறு, 11 மார்ச், 2012

கவிதை 9 - இயற்க்கை ராணி

குளிர்காலத்தில் பூத்திருக்கும் சின்ன ரோஜாவே,
நீ நாள்தோறும் காட்சி அளிக்கும் அழகிய பதுமை !
அன்புடன் கூடிய நறுமணம் வீசும் பொழுது,
நீ தோன்றுவதோ சிரிக்கும் சிகப்பு பொம்மை !

பூந்தோட்டத்தின் நடுவிலே மாமரத்தின் நிழலிலே,
தென்றல் தொடும் போது தலை அசைக்கும் பூவே !
முத்துக்கள் போல் பனித்துளி விழும் நேரம்,
நீ துள்ளலோடு ஆட்டம் போடும் குட்டித்தீவே !

ஜன்னல் வழியே உன்னை விழி வைத்து பார்க்கும் போது,
கவர்ந்திழுக்கும் உன் சிலிர்ப்பூட்டும் மகிழ்ச்சி !
உன்னை தொட வந்தால் முள் குத்தி இரத்தம் வடிந்தாலும்,
யாவராலும் பாராட்ட படும் உன் மாபெரும் எழுச்சி !

ஒவ்வொரு இதழ் ஸ்பரிசிக்கும் போதும் ஒலித்திடும் பாடல்,
உன் வாசனையால் பரவசம் அடையும் புத்துணர்ச்சி !
உனக்கு இயற்க்கை ராணி மகுடம் சூட்டினால்,
காதலர்களுக்கு உண்டாகும் புது கிளர்ச்சி !

கனவு கண்டேன் - தோட்டம் முழுதும் ரோஜாக்கூட்டம்,
காதல் பரிசாக உன்னை தேர்ந்தெடுத்தாலும் பூக்கள் மத்தியில்
உனக்கில்லை இனி வீழ்ச்சி ***

இப்படிக்கு,
சிவசுப்பிரமணியன் !

1 கருத்து: