ஞாயிறு, 11 மார்ச், 2012

கவிதை 8 - கோலங்கள்

உள்ளம் எனும் கடிதத்தில் உள்ள எழுத்துக்கள் யாவும்
சிதறி கிடக்கும் எண்ணங்கள் .....
உறவு எனும் கடலில் உள்ள முத்துக்கள் யாவும் 
நாள் தோறும் வண்ணங்கள் .....


புன்னகை எனும் பூக்களில் உள்ள வண்டுகள் யாவும்
தேன் ஊறும் கன்னங்கள் .....
சமயம் எனும் சமுத்திரத்தில் உள்ள அலைகள் யாவும்
நொடியில் மறையும் தருணங்கள் .....


நரகம் எனும் பாதாளத்தில் உள்ள குழிகள் யாவும்
துன்பம் தரும் சகுனங்கள் .....
வாழ்க்கை எனும் புத்தகத்தில் உள்ள அர்த்தங்கள் யாவும்
இன்பம் தரும் லக்ஷணங்கள் .....


குடும்பம் எனும் சொர்க்கத்தில் உள்ள உணர்ச்சிகள் யாவும்
வாசனை கொடுக்கும் சந்தனங்கள் .....
பரதம் எனும் கலையில் உள்ள நாட்டியங்கள் யாவும்
ரசிக்க தூண்டும் நடனங்கள் .....


சுனாமி எனும் போர்க்களத்தில் உள்ள விபத்துகள் யாவும்
சோகம் தரும் மரணங்கள் .....
இசை எனும் பாடலில் உள்ள ராகங்கள் யாவும் 
சப்தஸ்வரங்கள் சேர்ந்த சரணங்கள் .....


எவனோ ஒருவன் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன 
என்று உலவும் மனித கோலங்கள் ......!!!!


நேசமுடன்,
சிவசுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக