ஞாயிறு, 4 மார்ச், 2012

கவிதை 7 - கேட்டீங்களா ?

திகில் நாவல்களில் மூழ்கியிருந்த கலைஞனின் கவனத்தை
   சிதற வைத்தது யாரோ ...?


சமையலறையில் பம்பரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த 
வீட்டுகாரியின் கவனம் போனது எங்கோ ...?


அலுவலகத்திற்கு செல்ல தயாராக இருந்த குடும்பத்தலைவரை
திசை திருப்பியது யாரோ ...?


வாசலில் அரட்டையடித்து கொண்டிருந்த பாட்டிகள் கூட்டணியை 
சற்று எட்டிப்பார்க்க தூண்டியது யாரோ ...?


குட்டிச்சுவரில் வெட்டி கதை பேசிய இளைஞர்கூட்டத்தை 
திரும்பி பார்க்க சொன்னது யாரோ ...?


அந்த யாரோ வேறு யாரும் அல்ல - 
தெரு முனையில் பள்ளிக்கு போகாமல் அடம்பிடிக்கும்
ஒரு சுட்டிக்குட்டியின் மழலை கீச்சுக்குரல் ...!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக