ஞாயிறு, 4 மார்ச், 2012

கவிதை 6 - உலகம் புதுசு

உலகில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் 
விதம் விதமாக தோற்றங்கள் ....;
காலம் மாறுவது உண்மை என்று நிரூபிக்க 
தினம் தினம் மாற்றங்கள் ....;
மனித வாழ்க்கையில் மேடு பள்ளம் போல்
சற்று தடுமாறும் ஏற்றங்கள் ....;
மனிதனின் பாவச் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும்
இயற்கையின் சீற்றங்கள் ....;
தீர்ப்பு வழங்க சட்டம் இருந்தாலும் நரகத்தில்
தண்டிக்க வேண்டிய குற்றங்கள் ....;
வாழ்க்கை பாதையில் தடம் மாறாமல் இருக்க
தவிர்க்க வேண்டும் ஏமாற்ற்றங்கள் ....;
புரியாத புதிருக்கு விடை கிடைக்கும் வரை
உலகம் முழுதும் சுற்றுங்கள் ....;
உலகமே அழிந்து போகும் அந்த நாள் வரும் வரை
மனித குலத்தை காப்பாற்றுங்கள் ....;
எத்தனை யுகங்கள் தோன்றி மறைந்தாலும் ஒவ்வொரு
யுகத்தின் வரலாற்றை போற்றுங்கள் ....;
எத்தனை பிறவிகள் மண்ணில் பிறந்தாலும் இறந்தாலும்
மாறாது காலத்தின் அரங்கேற்றங்கள் ....!!!

அன்புடன்
சிவசுப்பிரமணியன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக