ஞாயிறு, 4 மார்ச், 2012

கவிதை 5 - பருவம்

*உள்ளம் தெளிவாகவும் அழுகை அழகாகவும் 
ஆரம்பிக்கும் குழந்தை பருவம் !
தோற்றம் கனிவாகவும் துணிச்சல் துள்ளலோடு 
முன்னேறும் பள்ளிப்பருவம் !
ஆற்றல் அறிவாகவும் மனம் காதலோடு கலந்து
வருடும் கல்லூரிப்பருவம் !

*ஆசை கனவுகளும் லட்சிய வெறியோடு வெற்றியை எட்ட
நினைக்கும் இளமை பருவம் !
தேடல் முயற்சிகளும் நம்பிக்கை உணர்வுகளோடு கஷ்டப்பட்டு
கிடைக்கும் வேலைப்பருவம் !
தித்திக்கும் இன்பமும் புரிதலும் வாழ்க்கைத்துணையோடு 
பயணமாகும் கல்யானப்பருவம் !

* குடும்பச்சுமைகளையும் எதிர்பார்ப்புகளையும் எதிர் நீச்சல் 
போட்டுக்கொண்டு அன்போடும் பாசத்தோடும் பரிவோடும்
நேசத்தோடும் நிறைந்த பக்குவத்துடன் முதுமை பருவம் !

நீங்கள் இப்போது எந்த பருவம் ???

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக