சனி, 31 மார்ச், 2012

கவிதை 13 - அன்றும் இன்றும்

இருள் சூழ்ந்த உலகில் பிறந்தான் ஆதி மனிதன் அன்று,
மின்சாரம் பாயும் பிரகாசமான உலகில் வாழும் நவீன மனிதன் இன்று !

மொழிகள் ஏதும் இல்லாமல் ஊமை விழிகள் 
மூலம் தொடர்பு இருந்தது அன்று,
விழிகளுடன் சேர்த்து தனி மனிதருக்கே தெரியாத பல,
ஆயிரகணக்கான மொழிகள் இன்று !

செய்திகள் தெரிவிக்க மனிதர்களையும் புறாக்களையும் 
தூது அனுப்பினார்கள் அன்று,
தொலைபேசி,தொலைக்காட்சி, இணையதளத்துடன் கணினி என்று
முன்னேறி கொண்டிருக்கும் விஞ்ஞான உலகம் இன்று !

வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செல்ல நடைபாதைகளை
பின்பற்றிய பாத சாரிகள் அன்று,
பல சக்கர வாகனங்கள், ரயில்-விமானங்கள்-கப்பல்கள் என்று
தொடரும் பயண முறைகள் இன்று !

இயற்க்கை மாற்றங்களை மட்டும் வைத்து தேதிகள் மற்றும்
நேரத்தை குறித்த காலம் அன்று,
சிறியது முதல் பெரியது வரை விதம் விதமான கடிகாரங்களிலும்
மின்னணு சாதனங்களிலும் மணி பார்க்கும் காலம் இன்று !

செடி கொடி மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் மற்றும் காட்டு
மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டார்கள் அன்று,
சைவ-அசைவ உணவு மட்டுமின்றி விவசாயத்தில் விளைந்த நெல்-கோதுமை தானியங்களோடு சேர்த்து புது புது உணவு வகைகள் இன்று !

யானைகளிலும் குதிரைகளிலும் கூட ஒரு காலம் சவாரி செய்ய
கற்றுக்கொண்டே வில்லும் அம்பும் ஏவி போர் நடந்தது அன்று,
நாட்டையே அழிக்கும் அணுகுண்டுகள், வெடி குண்டுகள்,வினோத 
ஆயுதங்கள் மற்றும் விகார ஏவுகணைகளால் தாக்குதல் இன்று !

காடு மலைகளுக்கு நடுவே விலங்குகளை தோழர்களாக கருதிய 
ஆதிவாசிகள் குடிசை போட்டார்கள் அன்று,
வானத்தை தொடும் அளவுக்கு கோபுரங்கள்,மாளிகைகள்,சிகரங்கள்,
கண்ணை பறிக்கும் கட்டிட வீடுகள் இன்று !

வித்தியாசங்கள் பல அடுக்கி விடலாம் அன்றும் இன்றும்,
மனிதனின் பிறப்பும் இறப்பும் மாறாமல் அரங்கேற்றம் ஆகிறது என்றும் !!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக