சனி, 17 மார்ச், 2012

கவிதை 12 - ஆத்ம யுத்தம்

கலைஞனின் ஞான ஒளியில் எரிந்தன அறிவுச்சுடர்;
இளைஞனின் காந்த விழியில் விரிந்தன காலை மலர்;
இறைவனின் நிசப்த மொழியில் படிந்தன ஆலமர வேர்;

எதிரிகளின் ஆக்ரோஷ வலையில் சிக்கின படைச்சுவர்;
பகைவனின் அம்பு மழையில் கசிந்தன குருதி நீர்;
தலைவனின் ஆயுதங்கள் நொடியில் மோதின நேருக்கு நேர்;

மைந்தனின் அகோர வீழ்ச்சியில் சரிந்தன வெற்றி தேர்;
துஷ்டர்களின் கத்தி முனையில் நெருங்கின யமனின் பாசக்கயிற்;
தளபதியின் மின்னல்வேக செயலில் கிழிந்தன எதிரியின் நார்;

கொடியவனின் மாய சூழ்ச்சியில் மடிந்தன ஓர் ஆயிரம் உயிர்;
கள்வனின் வஞ்சனையால் யுத்தபூமியில் புதைந்தன தருமத்தின் பயிர்;
கதிரவனின் அச்தம வேலையில் தரைமட்டமாகின தலைநகர்;

வேந்தனின் சாந்த வழியில் சிதைந்தன இளந்தளிர்;
தீயவர்களின் சங்கு ஒலியில் முடிந்தன இறுதி போர்;
வீரர்களின் மரண வேதனையில் எங்கும் பொழிந்தன சோகக் கண்ணீர்;

மாண்டவர்களின் அன்பு சமாதியில் மேகம் தெளித்தன தூயப் பன்னீர்;
உலகின் காலச்சுவடியில் வீழ்ந்தன வரலாற்று புதிர் ;
மண்ணின் மரியாதை பெட்டகத்தில் இன்னொரு ஆத்ம யுத்தம் தயார் !!!

வேல் முழக்கத்துடன்,
சிவசுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக