சனி, 17 மார்ச், 2012

கவிதை 11 - வாழ்க்கை

 வாழ்க்கை என்பது ஓர் அழகான பாட்டு ,
அதில் உள்ள வார்த்தைகள் யாவும் வரிகளாக மாற்றியது கடவுள்,
அதை தொகுத்து வழங்கியது தான் மனிதன், அந்த
பாட்டை ராகத்தோடு பாடுவது இதயம், அதை 
தாளத்தோடு ரசிப்பது மூளை, ஆனால் குரல் கேட்காமல் போய்
விட்டால் - பாடகருக்கும் கேட்பவருக்கும் தான் வலி அதிகம்,
கடைசியில் பழி எல்லாம் சேர்வது கவிஞருக்கு தான் !!!

வாழ்க்கை என்பது ஓர் நடமாடும் நூலகம்
அதை பொக்கிஷமாக கண்கானிப்பது கடவுள் ,
அதில் உள்ள புத்தகங்கள் யாவும் மனிதர்கள்,
ஒவ்வொரு புத்தகத்தை புரட்டி பார்த்தாலும் பிரச்னைகள் ,
புதிதாக வந்து செல்லரித்து போகும் பழைய புத்தகங்கள்,
விலை உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ள புத்தகங்கள்,
இப்படி பல வகையான புத்தகங்கள் இருந்தாலும்,
மாறாமல் இருப்பது அந்த ஒரே ஒரு கண்கானிப்பாளர் !!!

வாழ்க்கை ஒரு அழகான பூந்தோட்டம்;
வாழ்க்கை  ஒரு அற்புதமான கலைக்கூடம்;
வாழ்க்கை ஒரு விளங்கமுடியா அதிசயம்;
வாழ்க்கை ஒரு மாபெரும் சிற்பமண்டபம்;
வாழ்க்கை ஒரு மாறுபட்ட சித்திரச்சோலை;
வாழ்க்கை ஒரு வசந்தமான பளிங்கு மாளிகை;
வாழ்க்கை ஒரு எதிரொலிக்கும் கண்ணாடி;
வாழ்க்கை ஒரு விசித்திரமான கண்கட்டு மாயை;
வாழ்க்கை ஒரு வித்தக விளையாட்டு;

ஆதியும் அந்தமும் / ஆரம்பவும் முடிவும் புரியாத
இந்த வாழ்க்கைக்கு எத்தனை ஆயிரம் அர்த்தங்கள் !!!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக