ஞாயிறு, 11 மார்ச், 2012

கவிதை 10 - அவர்கள்

தனிமையில் வாழும் காலம் தான் வந்தார்கள் அவர்கள்,
சிறு புன்னகையால் தன் பக்கம் இழுத்துக்கொண்டார்கள் ...
கஷ்டப்படும் காலம் உற்சாகமாய் கை கொடுத்தார்கள்,
வருத்தங்கள் யாவும் நொடியில் மறக்க செய்தார்கள் ...
மன ஒற்றுமையை புரிய வைத்தார்கள் எனக்கு,
சுக-துக்கங்களை சமமாக பகிர்ந்து கொண்டு,
இருள் சூழ்ந்த வாழ்வின் வெளிச்சமாக திகழ்ந்தார்கள் !!!

தோழமை தேடி திரியும் போது வாழ்வின் வசந்தமாக,
வானத்தில் மின்னும் நட்சத்திரம் போல் ஜொலித்தார்கள் ...
பாசத்திற்கும் நேசத்திற்கும் பாலம் அமைத்தார்கள்,
அன்புக்கும் பண்புக்கும் புது இலக்கணம் படைத்தார்கள் ...
சோதனை வரும் போதெல்லாம் சோகங்களை கூட மூட்டை 
கட்டி தன் முதுகில் சந்தோஷமாக சுமப்பார்கள் !!!

சுமைகள் எல்லாம் சுகமானது என்று ஆதரவு தந்தார்கள்,
ஆபத்து வந்தால் சலிக்காமல் உதவிக்கரம் நீட்டினார்கள் ...
அமைதியில் கூட உணர்ச்சிகளை புரிந்து கொள்வார்கள் ,
வாழ்நாள் முழுதும் என் நிம்மதிக்கு பாடு பட்டவர்கள் !!!

கல்தூண் போல் என்றும் பாதுகாப்பளித்தார்கள்...
நட்புக்கு எல்லை இல்லை என்று தொடர்ந்து சரித்திரம் 
உருவாக்கியவர்கள் வேறு யாரும் அல்ல ,
என் உள்ளம் கவர்ந்த உண்மை நண்பர்கள் ....!!!


நட்புடன்,
சிவசுப்பிரமணியன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக