சனி, 31 மார்ச், 2012

ஹைக்கூ 3

பாம்புகளை தலையணைகளாக வைத்துக்கொண்டாலும்,
நம்பிக்கை துரோகம் செய்யும் விஷமிகளின் சகவாசம் வைத்துகொள்ளாதே !

ஹைக்கூ 2

துணிவு கொடுக்கும் உற்சாக வெற்றி,
கோழைத்தனம் கொடுப்பதோ அவமானத்தோல்வி !

ஹைக்கூ 1

உழைப்பு உனக்கு வெற்றிக்கான படிக்கட்டு,
விடாமுயற்சியுடன் செதுக்கு தன்னம்பிக்கை எனும் கல்வெட்டு !

கவிதை 13 - அன்றும் இன்றும்

இருள் சூழ்ந்த உலகில் பிறந்தான் ஆதி மனிதன் அன்று,
மின்சாரம் பாயும் பிரகாசமான உலகில் வாழும் நவீன மனிதன் இன்று !

மொழிகள் ஏதும் இல்லாமல் ஊமை விழிகள் 
மூலம் தொடர்பு இருந்தது அன்று,
விழிகளுடன் சேர்த்து தனி மனிதருக்கே தெரியாத பல,
ஆயிரகணக்கான மொழிகள் இன்று !

செய்திகள் தெரிவிக்க மனிதர்களையும் புறாக்களையும் 
தூது அனுப்பினார்கள் அன்று,
தொலைபேசி,தொலைக்காட்சி, இணையதளத்துடன் கணினி என்று
முன்னேறி கொண்டிருக்கும் விஞ்ஞான உலகம் இன்று !

வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செல்ல நடைபாதைகளை
பின்பற்றிய பாத சாரிகள் அன்று,
பல சக்கர வாகனங்கள், ரயில்-விமானங்கள்-கப்பல்கள் என்று
தொடரும் பயண முறைகள் இன்று !

இயற்க்கை மாற்றங்களை மட்டும் வைத்து தேதிகள் மற்றும்
நேரத்தை குறித்த காலம் அன்று,
சிறியது முதல் பெரியது வரை விதம் விதமான கடிகாரங்களிலும்
மின்னணு சாதனங்களிலும் மணி பார்க்கும் காலம் இன்று !

செடி கொடி மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் மற்றும் காட்டு
மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டார்கள் அன்று,
சைவ-அசைவ உணவு மட்டுமின்றி விவசாயத்தில் விளைந்த நெல்-கோதுமை தானியங்களோடு சேர்த்து புது புது உணவு வகைகள் இன்று !

யானைகளிலும் குதிரைகளிலும் கூட ஒரு காலம் சவாரி செய்ய
கற்றுக்கொண்டே வில்லும் அம்பும் ஏவி போர் நடந்தது அன்று,
நாட்டையே அழிக்கும் அணுகுண்டுகள், வெடி குண்டுகள்,வினோத 
ஆயுதங்கள் மற்றும் விகார ஏவுகணைகளால் தாக்குதல் இன்று !

காடு மலைகளுக்கு நடுவே விலங்குகளை தோழர்களாக கருதிய 
ஆதிவாசிகள் குடிசை போட்டார்கள் அன்று,
வானத்தை தொடும் அளவுக்கு கோபுரங்கள்,மாளிகைகள்,சிகரங்கள்,
கண்ணை பறிக்கும் கட்டிட வீடுகள் இன்று !

வித்தியாசங்கள் பல அடுக்கி விடலாம் அன்றும் இன்றும்,
மனிதனின் பிறப்பும் இறப்பும் மாறாமல் அரங்கேற்றம் ஆகிறது என்றும் !!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் ***

சனி, 17 மார்ச், 2012

கவிதை 12 - ஆத்ம யுத்தம்

கலைஞனின் ஞான ஒளியில் எரிந்தன அறிவுச்சுடர்;
இளைஞனின் காந்த விழியில் விரிந்தன காலை மலர்;
இறைவனின் நிசப்த மொழியில் படிந்தன ஆலமர வேர்;

எதிரிகளின் ஆக்ரோஷ வலையில் சிக்கின படைச்சுவர்;
பகைவனின் அம்பு மழையில் கசிந்தன குருதி நீர்;
தலைவனின் ஆயுதங்கள் நொடியில் மோதின நேருக்கு நேர்;

மைந்தனின் அகோர வீழ்ச்சியில் சரிந்தன வெற்றி தேர்;
துஷ்டர்களின் கத்தி முனையில் நெருங்கின யமனின் பாசக்கயிற்;
தளபதியின் மின்னல்வேக செயலில் கிழிந்தன எதிரியின் நார்;

கொடியவனின் மாய சூழ்ச்சியில் மடிந்தன ஓர் ஆயிரம் உயிர்;
கள்வனின் வஞ்சனையால் யுத்தபூமியில் புதைந்தன தருமத்தின் பயிர்;
கதிரவனின் அச்தம வேலையில் தரைமட்டமாகின தலைநகர்;

வேந்தனின் சாந்த வழியில் சிதைந்தன இளந்தளிர்;
தீயவர்களின் சங்கு ஒலியில் முடிந்தன இறுதி போர்;
வீரர்களின் மரண வேதனையில் எங்கும் பொழிந்தன சோகக் கண்ணீர்;

மாண்டவர்களின் அன்பு சமாதியில் மேகம் தெளித்தன தூயப் பன்னீர்;
உலகின் காலச்சுவடியில் வீழ்ந்தன வரலாற்று புதிர் ;
மண்ணின் மரியாதை பெட்டகத்தில் இன்னொரு ஆத்ம யுத்தம் தயார் !!!

வேல் முழக்கத்துடன்,
சிவசுப்பிரமணியன்.

கவிதை 11 - வாழ்க்கை

 வாழ்க்கை என்பது ஓர் அழகான பாட்டு ,
அதில் உள்ள வார்த்தைகள் யாவும் வரிகளாக மாற்றியது கடவுள்,
அதை தொகுத்து வழங்கியது தான் மனிதன், அந்த
பாட்டை ராகத்தோடு பாடுவது இதயம், அதை 
தாளத்தோடு ரசிப்பது மூளை, ஆனால் குரல் கேட்காமல் போய்
விட்டால் - பாடகருக்கும் கேட்பவருக்கும் தான் வலி அதிகம்,
கடைசியில் பழி எல்லாம் சேர்வது கவிஞருக்கு தான் !!!

வாழ்க்கை என்பது ஓர் நடமாடும் நூலகம்
அதை பொக்கிஷமாக கண்கானிப்பது கடவுள் ,
அதில் உள்ள புத்தகங்கள் யாவும் மனிதர்கள்,
ஒவ்வொரு புத்தகத்தை புரட்டி பார்த்தாலும் பிரச்னைகள் ,
புதிதாக வந்து செல்லரித்து போகும் பழைய புத்தகங்கள்,
விலை உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ள புத்தகங்கள்,
இப்படி பல வகையான புத்தகங்கள் இருந்தாலும்,
மாறாமல் இருப்பது அந்த ஒரே ஒரு கண்கானிப்பாளர் !!!

வாழ்க்கை ஒரு அழகான பூந்தோட்டம்;
வாழ்க்கை  ஒரு அற்புதமான கலைக்கூடம்;
வாழ்க்கை ஒரு விளங்கமுடியா அதிசயம்;
வாழ்க்கை ஒரு மாபெரும் சிற்பமண்டபம்;
வாழ்க்கை ஒரு மாறுபட்ட சித்திரச்சோலை;
வாழ்க்கை ஒரு வசந்தமான பளிங்கு மாளிகை;
வாழ்க்கை ஒரு எதிரொலிக்கும் கண்ணாடி;
வாழ்க்கை ஒரு விசித்திரமான கண்கட்டு மாயை;
வாழ்க்கை ஒரு வித்தக விளையாட்டு;

ஆதியும் அந்தமும் / ஆரம்பவும் முடிவும் புரியாத
இந்த வாழ்க்கைக்கு எத்தனை ஆயிரம் அர்த்தங்கள் !!!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன்.


ஞாயிறு, 11 மார்ச், 2012

கவிதை 10 - அவர்கள்

தனிமையில் வாழும் காலம் தான் வந்தார்கள் அவர்கள்,
சிறு புன்னகையால் தன் பக்கம் இழுத்துக்கொண்டார்கள் ...
கஷ்டப்படும் காலம் உற்சாகமாய் கை கொடுத்தார்கள்,
வருத்தங்கள் யாவும் நொடியில் மறக்க செய்தார்கள் ...
மன ஒற்றுமையை புரிய வைத்தார்கள் எனக்கு,
சுக-துக்கங்களை சமமாக பகிர்ந்து கொண்டு,
இருள் சூழ்ந்த வாழ்வின் வெளிச்சமாக திகழ்ந்தார்கள் !!!

தோழமை தேடி திரியும் போது வாழ்வின் வசந்தமாக,
வானத்தில் மின்னும் நட்சத்திரம் போல் ஜொலித்தார்கள் ...
பாசத்திற்கும் நேசத்திற்கும் பாலம் அமைத்தார்கள்,
அன்புக்கும் பண்புக்கும் புது இலக்கணம் படைத்தார்கள் ...
சோதனை வரும் போதெல்லாம் சோகங்களை கூட மூட்டை 
கட்டி தன் முதுகில் சந்தோஷமாக சுமப்பார்கள் !!!

சுமைகள் எல்லாம் சுகமானது என்று ஆதரவு தந்தார்கள்,
ஆபத்து வந்தால் சலிக்காமல் உதவிக்கரம் நீட்டினார்கள் ...
அமைதியில் கூட உணர்ச்சிகளை புரிந்து கொள்வார்கள் ,
வாழ்நாள் முழுதும் என் நிம்மதிக்கு பாடு பட்டவர்கள் !!!

கல்தூண் போல் என்றும் பாதுகாப்பளித்தார்கள்...
நட்புக்கு எல்லை இல்லை என்று தொடர்ந்து சரித்திரம் 
உருவாக்கியவர்கள் வேறு யாரும் அல்ல ,
என் உள்ளம் கவர்ந்த உண்மை நண்பர்கள் ....!!!


நட்புடன்,
சிவசுப்பிரமணியன் !

கவிதை 9 - இயற்க்கை ராணி

குளிர்காலத்தில் பூத்திருக்கும் சின்ன ரோஜாவே,
நீ நாள்தோறும் காட்சி அளிக்கும் அழகிய பதுமை !
அன்புடன் கூடிய நறுமணம் வீசும் பொழுது,
நீ தோன்றுவதோ சிரிக்கும் சிகப்பு பொம்மை !

பூந்தோட்டத்தின் நடுவிலே மாமரத்தின் நிழலிலே,
தென்றல் தொடும் போது தலை அசைக்கும் பூவே !
முத்துக்கள் போல் பனித்துளி விழும் நேரம்,
நீ துள்ளலோடு ஆட்டம் போடும் குட்டித்தீவே !

ஜன்னல் வழியே உன்னை விழி வைத்து பார்க்கும் போது,
கவர்ந்திழுக்கும் உன் சிலிர்ப்பூட்டும் மகிழ்ச்சி !
உன்னை தொட வந்தால் முள் குத்தி இரத்தம் வடிந்தாலும்,
யாவராலும் பாராட்ட படும் உன் மாபெரும் எழுச்சி !

ஒவ்வொரு இதழ் ஸ்பரிசிக்கும் போதும் ஒலித்திடும் பாடல்,
உன் வாசனையால் பரவசம் அடையும் புத்துணர்ச்சி !
உனக்கு இயற்க்கை ராணி மகுடம் சூட்டினால்,
காதலர்களுக்கு உண்டாகும் புது கிளர்ச்சி !

கனவு கண்டேன் - தோட்டம் முழுதும் ரோஜாக்கூட்டம்,
காதல் பரிசாக உன்னை தேர்ந்தெடுத்தாலும் பூக்கள் மத்தியில்
உனக்கில்லை இனி வீழ்ச்சி ***

இப்படிக்கு,
சிவசுப்பிரமணியன் !

கவிதை 8 - கோலங்கள்

உள்ளம் எனும் கடிதத்தில் உள்ள எழுத்துக்கள் யாவும்
சிதறி கிடக்கும் எண்ணங்கள் .....
உறவு எனும் கடலில் உள்ள முத்துக்கள் யாவும் 
நாள் தோறும் வண்ணங்கள் .....


புன்னகை எனும் பூக்களில் உள்ள வண்டுகள் யாவும்
தேன் ஊறும் கன்னங்கள் .....
சமயம் எனும் சமுத்திரத்தில் உள்ள அலைகள் யாவும்
நொடியில் மறையும் தருணங்கள் .....


நரகம் எனும் பாதாளத்தில் உள்ள குழிகள் யாவும்
துன்பம் தரும் சகுனங்கள் .....
வாழ்க்கை எனும் புத்தகத்தில் உள்ள அர்த்தங்கள் யாவும்
இன்பம் தரும் லக்ஷணங்கள் .....


குடும்பம் எனும் சொர்க்கத்தில் உள்ள உணர்ச்சிகள் யாவும்
வாசனை கொடுக்கும் சந்தனங்கள் .....
பரதம் எனும் கலையில் உள்ள நாட்டியங்கள் யாவும்
ரசிக்க தூண்டும் நடனங்கள் .....


சுனாமி எனும் போர்க்களத்தில் உள்ள விபத்துகள் யாவும்
சோகம் தரும் மரணங்கள் .....
இசை எனும் பாடலில் உள்ள ராகங்கள் யாவும் 
சப்தஸ்வரங்கள் சேர்ந்த சரணங்கள் .....


எவனோ ஒருவன் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன 
என்று உலவும் மனித கோலங்கள் ......!!!!


நேசமுடன்,
சிவசுப்பிரமணியன்.

ஞாயிறு, 4 மார்ச், 2012

நகைச்சுவை துணுக்கு

ஊட்டியில் சுட்டிகள் அடிக்கும் லூட்டி தாங்காமல் அனைவரையும்
வீட்டினுள் பூட்டி வேட்டி மடிச்ச தாத்தாவையும் கூட்டி கிட்டு
பாட்டி உசிலம்பட்டிக்கு புறப்பிடும் போது, தொட்டி மேல வட்டி
கட்டி வாங்கி வச்ச பானைச்சட்டி, பாட்டி கை தட்டி 
தாத்தா முட்டியை பேத்திடுச்சு ...!
பொட்டிய எடுத்து கிட்டு பாட்டி மட்டும் கிளம்ப,
போட்டி போட்டு பேட்டி காண கூட்டம் கூடுச்சு ....!

கவிதை 7 - கேட்டீங்களா ?

திகில் நாவல்களில் மூழ்கியிருந்த கலைஞனின் கவனத்தை
   சிதற வைத்தது யாரோ ...?


சமையலறையில் பம்பரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த 
வீட்டுகாரியின் கவனம் போனது எங்கோ ...?


அலுவலகத்திற்கு செல்ல தயாராக இருந்த குடும்பத்தலைவரை
திசை திருப்பியது யாரோ ...?


வாசலில் அரட்டையடித்து கொண்டிருந்த பாட்டிகள் கூட்டணியை 
சற்று எட்டிப்பார்க்க தூண்டியது யாரோ ...?


குட்டிச்சுவரில் வெட்டி கதை பேசிய இளைஞர்கூட்டத்தை 
திரும்பி பார்க்க சொன்னது யாரோ ...?


அந்த யாரோ வேறு யாரும் அல்ல - 
தெரு முனையில் பள்ளிக்கு போகாமல் அடம்பிடிக்கும்
ஒரு சுட்டிக்குட்டியின் மழலை கீச்சுக்குரல் ...!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

கவிதை 6 - உலகம் புதுசு

உலகில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் 
விதம் விதமாக தோற்றங்கள் ....;
காலம் மாறுவது உண்மை என்று நிரூபிக்க 
தினம் தினம் மாற்றங்கள் ....;
மனித வாழ்க்கையில் மேடு பள்ளம் போல்
சற்று தடுமாறும் ஏற்றங்கள் ....;
மனிதனின் பாவச் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும்
இயற்கையின் சீற்றங்கள் ....;
தீர்ப்பு வழங்க சட்டம் இருந்தாலும் நரகத்தில்
தண்டிக்க வேண்டிய குற்றங்கள் ....;
வாழ்க்கை பாதையில் தடம் மாறாமல் இருக்க
தவிர்க்க வேண்டும் ஏமாற்ற்றங்கள் ....;
புரியாத புதிருக்கு விடை கிடைக்கும் வரை
உலகம் முழுதும் சுற்றுங்கள் ....;
உலகமே அழிந்து போகும் அந்த நாள் வரும் வரை
மனித குலத்தை காப்பாற்றுங்கள் ....;
எத்தனை யுகங்கள் தோன்றி மறைந்தாலும் ஒவ்வொரு
யுகத்தின் வரலாற்றை போற்றுங்கள் ....;
எத்தனை பிறவிகள் மண்ணில் பிறந்தாலும் இறந்தாலும்
மாறாது காலத்தின் அரங்கேற்றங்கள் ....!!!

அன்புடன்
சிவசுப்பிரமணியன் !

கவிதை 5 - பருவம்

*உள்ளம் தெளிவாகவும் அழுகை அழகாகவும் 
ஆரம்பிக்கும் குழந்தை பருவம் !
தோற்றம் கனிவாகவும் துணிச்சல் துள்ளலோடு 
முன்னேறும் பள்ளிப்பருவம் !
ஆற்றல் அறிவாகவும் மனம் காதலோடு கலந்து
வருடும் கல்லூரிப்பருவம் !

*ஆசை கனவுகளும் லட்சிய வெறியோடு வெற்றியை எட்ட
நினைக்கும் இளமை பருவம் !
தேடல் முயற்சிகளும் நம்பிக்கை உணர்வுகளோடு கஷ்டப்பட்டு
கிடைக்கும் வேலைப்பருவம் !
தித்திக்கும் இன்பமும் புரிதலும் வாழ்க்கைத்துணையோடு 
பயணமாகும் கல்யானப்பருவம் !

* குடும்பச்சுமைகளையும் எதிர்பார்ப்புகளையும் எதிர் நீச்சல் 
போட்டுக்கொண்டு அன்போடும் பாசத்தோடும் பரிவோடும்
நேசத்தோடும் நிறைந்த பக்குவத்துடன் முதுமை பருவம் !

நீங்கள் இப்போது எந்த பருவம் ???

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !