வெள்ளி, 30 டிசம்பர், 2011

கவிதை 2 - வெல்க தோழமை

உணர்ச்சிகளை வெறும் மௌனத்தை வைத்தே புரிந்து கொள்ளும் என் ஆருயிர் தோழா ,
உன் மனக்கதவுகளை திறந்தே வைத்திருப்பதின் மாயமென்ன ....!
நிழல் கூட துணையில்லாத தருணங்களில் , நீ ஆறுதல் அளிக்கும் என் மனதிற்க்கு இனி காயமென்ன ....!

முரட்டு கோபத்தை அடக்கி வைத்திருக்கும் உன் மந்திர புன்னகை ,
மிஞ்சி விடுகறது விலை உயரும் பொன் நகையை ....!
அசட்டு தைரியத்தை அழகாக காட்டும் உன் கண்களின் சைகை ,
அசைக்க முடியாமல் செய்து விடும் மயில் தோகையை...!

பதட்டம் கொண்டு நெஞ்சம் தள்ளாடும் பொழுது ,
உன் காக்கும் கரங்கள் தருமே அடைக்கலம் ....!
கடினமான செயல்களை சுலபமாக செய்து விட்டு ,
அடக்கமாக நீ அமர்ந்திருப்பது அமர்க்களம் ...!

வியக்க வைக்கும் உன் மாறுபட்ட சிந்தனைகள் ,
 
நித்தம் ஒரு அர்த்தத்தை புரிய வைத்தது ....!
நெகிழ வைக்கும் உன் வேறுபட்ட விவாதங்கள் ,
புத்தம் புது பாடத்தை பதிய வைத்தது ....!

மகிழ்ச்சியை கடன் கேட்காமலே கொடுத்தாய் நீ எனக்கு ,
புகழ்ச்சியே வேண்டாம் என்று ஒதுங்கினாய் - மாபெரும் எளிமை உள்ளம் உனக்கு...!

சத்தமில்லாமல் சாதுர்யமாக அசாத்திய சாதனைகளை ,
கண் சிமிட்டும் தருணத்தில் முடித்து விட்டு ,
நீ மெல்ல சிரிக்கும் பொழுது யாவர் முகத்திலும்
பொங்கி வழிகிறது அடடா ஆச்சரியக்குறி...!

உனக்கு கிடைக்கும் வெற்றிகளுக்கு என்னிடமிருந்து ,
வாழ்த்து மடலோ வார்த்தை மழையோ தேவையில்லை என்றாய்..!
என் ஆழ் மனதில் துளிர் விட்டு கண்களில் சிந்தும்
ஆனந்த கண்ணீர் மட்டும் போதும் என்றாய் ....!

உன்னோடு பழகும் ஒவ்வொரு நொடியும்
 உற்சாகமூட்டும் சந்தொஷத்துளிகள் ...!
நம் நட்பை பார்த்து பேராசை படாமல்
இருந்தால் போதும் ஆயிரம் விழிகள்...!

பல விஷயங்களில் நம் அலை வரிசை ஒரு சேர சிந்தித்து
முடிவெடுக்க பலமடைகிறது நம் ஒற்றுமை ..!
அன்போடும் நம்பிக்கையோடும் என்றென்றும் அழிவில்லாமல்
வீர முழக்கத்தோடு தொடர்ந்து வெல்க நம் தோழமை.......!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !